Friday 9 October 2015

வல்லவன் விதி என்று மாறும்..?

மதமே அனைத்தையும் தீர்மானிக்கின்றது, பெண் கல்வி முதல் அனைவரின் உணவு பழக்கம் வரை என்று நாம் நினைத்தால் நாம் வடி கட்டிய முட்டாள்கள்.

ஒரு காலத்தில் பிராமனர்கள் மாட்டிறைச்சி உண்டா்கள் அதனால் அது சரி. பின் அவர்கள் அதை நிறுத்தியதால் இன்று அது தவறு.

ஆக  ஆதிக்க சாதியினர் செய்வது சரி. அவர்கள் செய்ய கூடாது என்று சொல்லி அதை மீறி செய்தோமானால் அது தவறு.

கடல் கடந்து போனால் பாவம். ஆனால் இன்று பெரும்பாலான பிராமனர்கள் அயல் நாடுகளில்.

கூத்து நாடகம் ஆகியவற்றில் நடிப்பவன் கீழ் சாதியாவான் என்று இந்து மதம் கூறுகிறது. ஆனால் இன்று திரை துறையில் பல பிராமனர்கள் உள்ளார்கள்.

வல்லவன் விதி என்று மாறும்..?

Monday 5 October 2015

வெறுப்பு அரசியல்

வெறுப்பு அரசியலை வைத்தே எத்தனை நாட்கள் குளிர் காய்வார்கள் இந்த இந்து அடிப்படைவாதிகள். பசுவதை தவறு என்றால் புல் பூன்டு என்று எதை துன்புறுத்தினாலும் தவறு தானே

பிராமனத்தின் எச்சமான சாதியையும்  அவர்களின் அடிமை இந்து அடிப்படைவாத கட்சிகளை வைத்து வெறுப்புனர்வை தூன்டி வருகின்றனர் இந்த அடிப்படைவாதிகள்.

வெறுப்பரசியலில் உயிர் பலி என்றால் அது அப்பாவிகளும் அன்னாடங்காய்ச்சிகளுமே. அவர்களின் பினங்களின் மீது நடக்கும் அரசியல் என்றுதான் ஒழியும்?

Saturday 3 October 2015

புலி சொல்லும் பாடம் என்ன?

100 கோடி ரூபாய் படங்கள் எடுப்பவர்களெல்லாம் உண்மையில் சினிமா துரோகிகள்.

இரன்டாம் உலகம் படத் தோல்வியால் அந்த  தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம்.

பீமாவால் விழுந்த ரத்னம் சமீபத்தில் தான் மீண்டெழுந்தார்.
குஞ்சுமோனெல்லாம் காணாமலே போய் விட்டார்.

ஐ படத்தால் சொத்தை அடமானம் வைத்தார் ரவிச்சந்திரன்.அதன் பின் கொடுத்த பேட்டியில் ,ஒரு கோடி சம்பளம் தர தாமதமானதால் படப்பிடிப்பிற்கு செல்ல மறுத்த  இயக்குனரைப் பற்றி கூறினார்.

புலியால் அத்தயாரிப்பாளர் சந்திக்கும் இழப்பை யார் ஈடு செய்வது?

பாகுபலியோ எந்திரனோ தோல்வியடைந்தாலும் ரஜினி ராஜமௌலியின் பிம்பத்தால் தப்பியிருக்கும் ஆனால் அவை பெரும் வெற்றி அடைந்தது.

புலி சொல்லும் பாடம் ஒன்றெ. 100 கோடிக்கு வர்த்தகம் இல்லாத சூழ்நிலையில் அவ்வளவு பெரிய முதலீடு என்பது தயாரிப்பாளர் போன்றோரை கொல்வதற்கு சமம்