Monday 24 August 2015

வியாபாரத்தின் விலை மனிதமா ?

பிற்போக்குத்தனத்தை வியாபாரம் செய்வதில்  அரசியல்வாதிகளும் வனிகர்களும் போட்டி போடுகின்றனர்.
சாதியை வைத்து அரசியல் வியாபாரமும்  பெண்களை வைத்து நகை மற்றும் பெரும்பாலான வனிகர்கள் வியாபாரம் செய்கிறார்கள்.

பிரகாஷ்ராஜ்  போன்ற பெரிய நடிகர்கள் திரையில் பெண்ணியம் பேசுபவர்கள் உண்மையில் பெண்களுக்கு எதிரான கருத்திலுள்ள விளம்பர வியாபாரம் என மிக மோசமான அருவருக்கதக்க வியாபாரத்தை செய்து வருகிறார்கள்.

மக்கள்,மக்கள் நலன் என்பவையெல்லாம் காற்றில் பறந்துவிட்டனவோ என வருத்தம் வருகிறது.
பொறுப்பற்ற செயல்களை மக்களான நாம் அனுமதிக்கும் வரை இது போன்ற அவலங்கள் நடைபெறவே செய்யும்

Friday 21 August 2015

    தலித் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அம்மக்கள் நம்புகிறவர்களில் பெரும்பான்மையானவர்கள் அவர்களை வைத்து அரசியல் செய்கிறார்களேயொழிய தலித் மக்களுக்கான தீர்வை தருவதில்லை..

பாபநாசம்



     பாபநாசம் ஒரு மிகச் சிறந்த படம். கமலஹாசன் தன் அறிவை காட்டுகிறேன் என்று கதை எழுதி கொல்லாமல் அளவான கதைக்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்
  
    குளிக்கும் படம் எடுத்து மிரட்டும் ஒருவனிடமிருந்து தன்னை காப்பாற்றி கொள்ள நடக்கும் போராட்டத்தில் கொல்லப்படும்  ஒருவன் அதன்பின் நடக்கும் கதை என்பது தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல  என்றாலும் பாபநாசம் நம் கவனத்தா ஈர்பதற்கு காரணம் கதாநாயகனின் கதாபாத்திரமும் கதை சொல்லப்பட்ட விதமும் தான்.

  பொதுவாக  இது போன்ற கதையில் கதாநாயகன் பன்ச் வசனம் பேசியும் நம்ப முடியாத வீரத்தை காட்டியும் தமிழ் சினிமா கதை சொல்லி இருக்கும். ஆனால் வீர வசனம் எதுவும் இல்லாமல் யதார்த்த கதை சொல்லியுள்ளார் இயக்குநர்.

     இவையனைத்தையும் தான்டி  பாபநாசத்தின் சிறப்பு என்னவெனில்  அதிகாரத்தின் எல்லை.ஐஜியின் மகனை கண்டுபிடிக்க ஒரு சராசரி மனிதனை எந்தவித மனித  உரிமையையும் கடைபிடிக்காமல் சட்டமெல்லாம் அதிகார வர்கத்தையும் பணம்  படைத்தவர்களின் சொல்லுக்கு எப்படி அடுகிறது என்பதும் அதில் விட்டில் பூச்சியாக அன்றாடங்காய்சிகள் எப்படி அடிபடுகிறார்கள் என்பதுவுமே.

80 சதவிகித  சதாரண மக்களின் ஆதரவில் அரியன் ஏறும் ஆட்சியாளர்கள் ஓட்டளித்தவர்களை நிராயுதபானியாக அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆயுதமான சட்டத்தையும் பிடிங்கிக் கொள்கிறார்கள்.
அப்பாவி மக்கள் அறியாமல் செய்யும் சிறு தவறுக்காக காலம் முழுதும் மன உளச்சலில்
வாழ்கிறார்கள்.
இறுதி காட்சியில் கமலஹாசன் கூறுவது போல்  தன் மகன் மீது தவறு இருந்தாலும் அவனை காப்பாற்றவே அந்த   ஐஜி தாய்  முயன்று இருப்பாள்.

அதிகாரம் பணம் இல்லாத தாய்மார்கள் பலர் குற்றம் செய்யாத மகன்களை சிறையில் விட்டு அப்பட்டமான மனித  உரிமை மீறல்களை சந்தித்து வருகின்றனர்.அது போன்ற அப்பாவிகளுக்கு இத்திரைப்படம் பாபநாசத்தை சமர்பிப்போமாக....

Wednesday 19 August 2015

தேர்தல் வர பல மாதங்கள் இருக்கும் நிலையில் போராட்டங்கள் மூலம் தொன்டர்களை தயார் படுத்த தொடங்கி விட்டது கட்சிகள்.அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை சில கட்சிகள் எடுப்பதன் மூலம் ஆளும் கட்சியின் கூட்டனியாகவும் எதிர்ப்பதன் மூலம் மாற்று கூட்டனியாகவும் மௌனம் காப்பதன் மூலம் மூன்றாம் அணியாகவும்  தயாராகிரார்கள் என்று யூகம் செய்ய முடிகிறது.கடைசி நேர மாறுதல்களும் அரங்கேற்றமடையும்.

திமுக அதிமுக மட்டுமே பிரதான அணிகள் மற்றவை தங்களின் பலத்தை  பரிட்சித்து தங்களின் வாக்கு சதவிகதத்தை காண்பித்து பின்னாளில் வரும் தேர்தல்களில் கூட்டனி பேரம் பேச வகை செய்யவும் தயாராகிறார்கள்.

மது ஒழிப்பு போராட்டத்தின் மூலம் தங்களின் இருப்பை காட்ட பெரும்பாலான கட்சிகள் முனைந்ததையடுத்து திமுக  ஆதரித்தும் அதிமுக அதை எதிர்கொள்ளவும் தள்ளப் பட்டுவிட்டன..

தொன்டர்களின் உற்சாகமும் வேலையும் கூட்டனி பலமுமே வெற்றியை தீர்மானித்துள்ளன. வரும் தேர்தலுக்கு தற்பொழுதே கட்சிகள் தயாராவது வெற்றியின் தேவையை காட்டுகிறது.

காத்திருப்போமாக

Monday 17 August 2015

மீண்டும் தமிழர்களால் தோற்கடிக்க படும் சூழலே தற்பொழுது நிலவுகிறது.

தீவிரவாதம் என்று எல்லா மக்களை ஏமாற்ற முடியாது என்பதை மீண்டும் நிருபனமாகியுள்ளது.
அனைத்து வாக்குகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கே விழுந்ததை பார்த்தால் தேசிய கூட்டனியை விட தமிழ் கூட்டனி மீதே தமிழர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்று தோன்றுகிறது.
70 ஆண்டுகளானாலும் 700ஆண்டுகளானாலும்  சமதர்ம சமுதாயத்தை நோக்கி நாம் செல்லாத வரை வளர்ச்சி எல்லாம் கானல் நீர் தான

சாதி அரசியலில் ஊரியுள்ள  அரசியல் தலைவர்கள் அப்பாவிகளின் உதிரம் மூலமாக வளர்க்க நினைக்கின்றார்கள் வீனர்கள்.
மதுக்கோப்பையை பிரபலப்படுத்தியதில் திரைத் துறையினருக்கு ஓரு பெரிய பங்கு உண்டு. அனைத்து கதாநாயகர்களும் குடிப்பது ஒரு பண்பாடு என்பது போல் திரையில் காட்டினர். கலைவானரின் காலை தொடவும் அருகதை இல்லாதவர் சின்ன கலைவானர் என்று கூறிக் கொன்டார்.மதுவுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்த கலைவானரோடு தங்களை ஒப்பிட்டு கொள்ளும் அறிவிளிகள்
இன்றய கதாநாயகர்கள் அனைவரும் சமூக பொறுப்பு சிறிதும் இன்றியே வசூல் நட்சத்திர அந்தஸ்து என்றே  திரையுலகில் வலம் வருகிறார்கள் என்றால் அது மிகை ஆகாது.
வேலைநிறுத்தம் ஒரு சரியான  ஆயுதம் இல்லை என்று தெரிந்தும் அதையே தொழிற்சங்கங்கள் கையில் எடுப்பது அபத்தமாக  உள்ளது.
உச்சநீதிமன்றம் வேலைநிறுத்ததிற்கு எதிராக பலமுறை தீர்பபளித்த பின்னும் அதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது ஏற்க்கதக்கதாக  இல்லை
 

Sunday 16 August 2015

நான் எனது என்ற சுயநலத்தை தான்டி நாம் நமது என்னும் பொதுநலத்தில் உள்ளது ஒரு தலைவனின் தகுதி.

Saturday 15 August 2015

KFJ விளம்பர கேவலத்தை எந்த தமிழ் அமைப்போ பெண்கள் அமைப்போ எதிர்காதது ஏன்?
இதை எப்படி மக்கள் ஏற்று கொன்டார்கள்?
வளர்ச்சியை கண்கூடாக பார்க்க முடியவில்லை.ஆனால் எல்லா பக்கமிருந்தும் வளர்ச்சி என்ற சத்தம் மட்டும் கேட்கின்றது