Wednesday 16 December 2015

செடியை வெட்டாததால் மரமான விஷம்

நான் சிம்புவின் ஆதரவாளன் இல்லை. உண்மையில் சிம்புவின் படங்களை பார்த்து மிக குறைவே. இன்று பீப் சாங்கால் அவர் பெண்களை கொச்சைபடுத்தி விட்டார் என்பது எவ்வளவு உண்மையோ அதற்கு அவர் மட்டும் பொறுப்பல்ல  என்பதும் உண்மை.

சிவாஜி எம்ஜிஆர் காலத்தில் அதிகம் புலப்படாத வன்னம் ஆரம்பித்த  ஈவ் டீசிங் ரஜினி கமல் காலங்களில் உச்சத்தை தொட்டது.விஜய் அஜீத் படங்களிலும் ஈவ் டீசிங் இல்லாமல் இல்லை.

தன்னை அடுத்த தலைவராக காட்ட நினைத்து விஜய் நடித்த தலைவா திரைப்படத்தில் சம்மந்தமே இல்லாமல் பெண்களை இழிவுபடுத்தும் பாடல் இடம்பெற்றது.

மன்னன் படையப்பா படங்கள் பெண்களை பின்னோக்கி அழைத்தது .சந்திரமுகியில் தேவையே இல்லாத  ஒரு பெண் வில்லியை இனைக்கப்பட்டிருந்தது.
அன்று யாருமே பொங்கவில்லை என்பது தான் மிகவும் வேதனைக்குரியது.

அன்று தனலாக  இருந்தது இன்று சிம்பு என்னும் அரைகுறையால் நெருப்பாக மாறியுள்ளது.

ஆனால் நல்ல படங்களை ஆதரிக்காமல் குப்பைகள் வர யார் காரணம்.

 மக்களான நாம் அதிலிருந்து தப்ப முடியுமா.?

வழக்கு எண்18/9, ஆதலால் காதல் செய்வீர், மற்றும் பல நல்ல படங்களை ஆதரிக்காதமையால் இளைஞர்களுக்கான படம் என்ற போர்வையில் பல குப்பைகள் கல்லா கட்டுகின்றன
 இன்று பிரகாஷ் ஆபாசத்தின் அடுத்த பரிமானத்தை திரிஷா இல்லனா நயன்தாராவில் காட்டினார்.

தி இ ந வந்த அதே சமயத்தில் கவுன்டமணி நடித்த 49  ஓ விவசாயிகளின் பிரச்சனை  சொன்ன படம் வெளியானது.49ஓ படுதோல்வி அடைய தி இ ந அபார வெற்றி பெற்றது.
ஆக மக்களான நாம் சிம்புவை கைகாட்டி தப்பித்து கொள்ள முடியாது.

தன் தாய் சகோதரி பெண் என்ற முறையில் சிம்புவிற்கு தார்மீக  உரிமையில்லையா என்று நாம் கேட்டாலும் அந்த குற்றத்தை ஆரம்பத்திலேயே கிள்ளாத நம் மீதும் குற்றம் உள்ளத என்பதை மறுக்க முடியாது.

Sunday 13 December 2015

எத்தனை நாட்களுக்கு வேரை விட்டுவிட்டு கிளையை வெட்டுவீர்கள்.

எத்தனை நாட்களுக்கு வேரை விட்டுவிட்டு கிளையை வெட்டுவீர்கள்.

வெள்ள பாதிப்புகளுக்கு ஜெயலலிதா மட்டுமே பொறுப்பு என்ற ரீதியில் பல அதிமேதவிகள் பேசி வருகிறார்கள். ஆனால் உண்மை அதுதானா

ஏரி புறம்போக்குகள் பட்டா நிலமாக மாற்றப்பட்டது கடந்த  ஐந்து ஆண்டுகளாகத்தான் நடைபெறுகிறதா?

விடில்லா ஏழைகளைப் பற்றி என்றுமே கவலைபடாத சமூகம் மாடி வீடு சாலைக்கு வந்ததும் ரகுமான் சித்தார்த் அகதிகளானதும் கவலையில் மூழ்கியது

இன்றும் ரேசன் அட்டை இல்லாத நாடோடி சமூகம் இங்கு இருக்கவே செய்கிறது.நிலங்கள் கையப்படுத்தும் பொழுது பல லட்சக் கணக்கான விவசாயிகள் அகதிகள் ஆனாதையானதைப் பற்றி கவலைபடாத சமுதாயம்தான் இது.

சென்னையே மழையில் தின்டாடினாலும் அதிகம் பாதிப்படைந்தது ஏரி நிலங்களில் வீடு கட்டிய பகுதிகள்தான். அங்கே எப்படி வந்தார் ஜெயலலிதா.
சென்னை மாநகராட்சியின் மேயர் சைதை துரைசாமி. அப்படியெனில் சென்னையில் நடந்த துயரங்களுக்கு ஜெயலலிதாவை குற்றம் சொல்வது ஏன்? வேலூரில் ஒரு அசம்பாவிதம் நடந்தால் அந்த மாநகராட்சியின் மேயர் கார்தியாயினியை விட்டு முதல்வர் ஜெயலலிதாவை குறை கூறுவீர்களா?

சென்னையின் துயரத்திற்க்கு அரசியல் மட்டுமல்ல பல சமூக காரணங்களூம் உண்டு.அதில் நான் நீ நாம் ஜெயலலிதா கருனாநிதி அளும்கட்சி எதிர்கட்சி என அனைவரும் அதில் இருப்பார்கள்

பரவாயில்லை itisprashanth சொன்னது போல் பீப் சாங் கேட்டு சந்தோசமாக  இருப்போம்

Saturday 21 November 2015

எங்கே பத்திரிக்கை தர்மம்


தமிழ் நாளேடுகள் திமிழகத்தில் அரங்கேறும் பல முறைகேடுகளை கண்டும் காணாதது போல் இருக்கின்றது.

அம்முறைகேடுகள் அம்பலமான பின் அதை சுடான பரபரப்பு செய்தியாக வெளியிடுகிறது.
பத்திரிக்கை தர்மத்தை காற்றில் பறக்க வைக்கின்றனர் பெரும்பாலான பத்திரிக்கையாளர்கள்.

Friday 9 October 2015

வல்லவன் விதி என்று மாறும்..?

மதமே அனைத்தையும் தீர்மானிக்கின்றது, பெண் கல்வி முதல் அனைவரின் உணவு பழக்கம் வரை என்று நாம் நினைத்தால் நாம் வடி கட்டிய முட்டாள்கள்.

ஒரு காலத்தில் பிராமனர்கள் மாட்டிறைச்சி உண்டா்கள் அதனால் அது சரி. பின் அவர்கள் அதை நிறுத்தியதால் இன்று அது தவறு.

ஆக  ஆதிக்க சாதியினர் செய்வது சரி. அவர்கள் செய்ய கூடாது என்று சொல்லி அதை மீறி செய்தோமானால் அது தவறு.

கடல் கடந்து போனால் பாவம். ஆனால் இன்று பெரும்பாலான பிராமனர்கள் அயல் நாடுகளில்.

கூத்து நாடகம் ஆகியவற்றில் நடிப்பவன் கீழ் சாதியாவான் என்று இந்து மதம் கூறுகிறது. ஆனால் இன்று திரை துறையில் பல பிராமனர்கள் உள்ளார்கள்.

வல்லவன் விதி என்று மாறும்..?

Monday 5 October 2015

வெறுப்பு அரசியல்

வெறுப்பு அரசியலை வைத்தே எத்தனை நாட்கள் குளிர் காய்வார்கள் இந்த இந்து அடிப்படைவாதிகள். பசுவதை தவறு என்றால் புல் பூன்டு என்று எதை துன்புறுத்தினாலும் தவறு தானே

பிராமனத்தின் எச்சமான சாதியையும்  அவர்களின் அடிமை இந்து அடிப்படைவாத கட்சிகளை வைத்து வெறுப்புனர்வை தூன்டி வருகின்றனர் இந்த அடிப்படைவாதிகள்.

வெறுப்பரசியலில் உயிர் பலி என்றால் அது அப்பாவிகளும் அன்னாடங்காய்ச்சிகளுமே. அவர்களின் பினங்களின் மீது நடக்கும் அரசியல் என்றுதான் ஒழியும்?

Saturday 3 October 2015

புலி சொல்லும் பாடம் என்ன?

100 கோடி ரூபாய் படங்கள் எடுப்பவர்களெல்லாம் உண்மையில் சினிமா துரோகிகள்.

இரன்டாம் உலகம் படத் தோல்வியால் அந்த  தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம்.

பீமாவால் விழுந்த ரத்னம் சமீபத்தில் தான் மீண்டெழுந்தார்.
குஞ்சுமோனெல்லாம் காணாமலே போய் விட்டார்.

ஐ படத்தால் சொத்தை அடமானம் வைத்தார் ரவிச்சந்திரன்.அதன் பின் கொடுத்த பேட்டியில் ,ஒரு கோடி சம்பளம் தர தாமதமானதால் படப்பிடிப்பிற்கு செல்ல மறுத்த  இயக்குனரைப் பற்றி கூறினார்.

புலியால் அத்தயாரிப்பாளர் சந்திக்கும் இழப்பை யார் ஈடு செய்வது?

பாகுபலியோ எந்திரனோ தோல்வியடைந்தாலும் ரஜினி ராஜமௌலியின் பிம்பத்தால் தப்பியிருக்கும் ஆனால் அவை பெரும் வெற்றி அடைந்தது.

புலி சொல்லும் பாடம் ஒன்றெ. 100 கோடிக்கு வர்த்தகம் இல்லாத சூழ்நிலையில் அவ்வளவு பெரிய முதலீடு என்பது தயாரிப்பாளர் போன்றோரை கொல்வதற்கு சமம்

Thursday 24 September 2015

நலமானவற்றை நோக்கி மக்களான நாம் பயனிப்போம்

மக்களின் நலனே ஆட்சியாளரின் நலன் என்று திருவள்ளுவர் சானக்கியர் முதல் இன்றைய அரசியல் அறிஞ்சர்கள் வரை கூறியுள்ளனர். ஆனால் இன்று மக்கள் சக்தியை மக்களும் புரிந்து கொள்வதில்லை, மக்களுக்காகத்தான் ஆட்சியாளர்கள் என்பதை  இந்தியாவில் உள்ள பெரும்பாலான  ஆட்சியாளர்கள் அதைப் பற்றி நினைப்பதில்லை.

தவறு யார் பக்கம் என்பதை விட சரியான  ஆட்சிமுறை எது என்பதை அனைவரும் உணர வேண்டும்.

நலமானவற்றை நோக்கி மக்களான நாம் பயனிப்போம்.