Wednesday 19 August 2015

தேர்தல் வர பல மாதங்கள் இருக்கும் நிலையில் போராட்டங்கள் மூலம் தொன்டர்களை தயார் படுத்த தொடங்கி விட்டது கட்சிகள்.அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை சில கட்சிகள் எடுப்பதன் மூலம் ஆளும் கட்சியின் கூட்டனியாகவும் எதிர்ப்பதன் மூலம் மாற்று கூட்டனியாகவும் மௌனம் காப்பதன் மூலம் மூன்றாம் அணியாகவும்  தயாராகிரார்கள் என்று யூகம் செய்ய முடிகிறது.கடைசி நேர மாறுதல்களும் அரங்கேற்றமடையும்.

திமுக அதிமுக மட்டுமே பிரதான அணிகள் மற்றவை தங்களின் பலத்தை  பரிட்சித்து தங்களின் வாக்கு சதவிகதத்தை காண்பித்து பின்னாளில் வரும் தேர்தல்களில் கூட்டனி பேரம் பேச வகை செய்யவும் தயாராகிறார்கள்.

மது ஒழிப்பு போராட்டத்தின் மூலம் தங்களின் இருப்பை காட்ட பெரும்பாலான கட்சிகள் முனைந்ததையடுத்து திமுக  ஆதரித்தும் அதிமுக அதை எதிர்கொள்ளவும் தள்ளப் பட்டுவிட்டன..

தொன்டர்களின் உற்சாகமும் வேலையும் கூட்டனி பலமுமே வெற்றியை தீர்மானித்துள்ளன. வரும் தேர்தலுக்கு தற்பொழுதே கட்சிகள் தயாராவது வெற்றியின் தேவையை காட்டுகிறது.

காத்திருப்போமாக

No comments:

Post a Comment