Thursday, 24 September 2015

நலமானவற்றை நோக்கி மக்களான நாம் பயனிப்போம்

மக்களின் நலனே ஆட்சியாளரின் நலன் என்று திருவள்ளுவர் சானக்கியர் முதல் இன்றைய அரசியல் அறிஞ்சர்கள் வரை கூறியுள்ளனர். ஆனால் இன்று மக்கள் சக்தியை மக்களும் புரிந்து கொள்வதில்லை, மக்களுக்காகத்தான் ஆட்சியாளர்கள் என்பதை  இந்தியாவில் உள்ள பெரும்பாலான  ஆட்சியாளர்கள் அதைப் பற்றி நினைப்பதில்லை.

தவறு யார் பக்கம் என்பதை விட சரியான  ஆட்சிமுறை எது என்பதை அனைவரும் உணர வேண்டும்.

நலமானவற்றை நோக்கி மக்களான நாம் பயனிப்போம்.

Saturday, 19 September 2015

49 - ஒ

49- ஒ விறுவிறுப்பான படமா என்றால் இல்லை. திரைக்கதையிலும் தொய்வு உள்ளது. ஆனால் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

தமிழக அரசியல் எந்த மையத்தில் சுற்றுகிறது, மக்கள் எவ்வளவு பொறுப்புனர்வற்று உள்ளனர் என்பதையெல்லாம் தான்டி  ஓட்டு என்ற ஒரு மாபெறும் ஆயுதத்தை மக்கள் எவ்வாறு உனராமல் உள்ளார்கள் என்பதை வலியுறுத்தும் படமாக 49- ஒ உள்ளது.

கொடுக்கப்பட்ட சிறு இடத்தில் கதாநாயகி இல்லாமல் பின்னனி இசை போன்ற முக்கியமானவையெல்லாம் கொடுக்கப்பட்ட சிறு பணத்தைக் கொன்டு படம் எடுத்த இயக்குனர் ஆரோக்கியதாஸை நிச்சயம் பாராட்ட வேண்ட

அஜீத் விஜய் சூர்யா விக்ரம் போன்ற பெரிய நட்சத்திரங்களாக சொல்லிக் கொள்ளுபவர்கள் சமூக பொறுப்புனர்வுள்ள படங்கள் தருகிறார்களா என்பது கேள்விக்குறியே. அப்படி ஒரு படத்தில் தன் பங்கை சரியாக செய்த கவுண்டமணியை பாராட்டியே ஆக வேண்டும்.

Friday, 18 September 2015

வைகோவின் அரசியல் வியூகம

வைகோவின் முடிவுகள் சட்டமன்ற தேர்தல்களின் பொழுது முரன்பட்டதாகவே உள்ளது.
தற்பொழுதிய சூழ்நிலையில் அறப்போர்களுக்கெல்லாம் மதிப்பிறுப்பதே இல்லை. ஆகையால்தான் கொள்கைகள் பற்றி முழக்கமிடும்  கம்யூனிஸ்ட்கள் கூட தேர்தல் நேரங்களில் சமரசம் செய்து கொள்கின்றன

 பாமகவை போன்று சில தொகுதகளிலாவது தனித்து நின்று வெற்றி பெற முடியும் என்றால் தனித்து நிற்பதில் அர்த்தமுள்ளது. ஆனால் மதிமுகவின் ஓட்டுக்கள் பரவலாக உள்ளதேயொழிய எந்த தொகுதியிலும் தனித்து நின்று வெற்றி பெற முடியும் என்ற நிலை இல்லை.

18% நாடாளமன்ற தேர்தலில் வாக்கு மூன்றாம் அணி பெற்றாலும் அதில் விஜயகாந்தின் வாக்குகள் பெறும் பங்காற்றின. தனித்து நிற்க வேண்டிய அவசியம் தற்பொழுது நிலாவத பட்சத்தில் மதிமுக தனித்து நிற்பது யாராலும்ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஆகையால் நடைமுறைக்கு சரிவரும் நல்லதொரு முடிவை திரு.வைகோ எடுப்பாராக

Thursday, 17 September 2015

யார் காரணம்

மாநகர பேருந்தில் பயனம் செய்த பொழுது மழை பெய்தது. பேருந்தின் வெளியே மட்டுமின்றி உள்ளேயும் பெய்தது.அன்று ஆட்சியாளர்கள் மீது மட்டுமல்ல தேர்தல் நேரத்தில் மட்டும் வீரத்தை காட்டும் மக்கள் மீதும் கோபம் வந்தது.
ஊழலை கேள்வி கேட்காமல் ஒத்துக் கொள்ளும் சகிப்புதன்மை மீதும் கோபம் வந்தது.

இன்று பேருந்தின் ஓட்டை வழியாக விழுந்த அந்த பெண் மக்களின் சகிப்புதன்மையால் விழுந்தார்..ஊழல் லஞ்சம் நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது உண்மையில் நம்மை நாமே கேள்வி கேட்க வேண்டியுள்ளது.
திமுக அதிமுக என பழி போடாமல்  நாம் அனைவரும் இதற்கு காரணம் என்பதை உணர வேண்டும்.

திமுகவிற்கு அதிமுக மாற்று இல்லை. அதிமுகவிற்கு திமுக மாற்று இல்லை. உண்மையான மாற்றத்தை நாம் கொன்டு வராத வரை நிர்வாக சீர்கேடு தொடர்கதையே