Thursday 17 September 2015

யார் காரணம்

மாநகர பேருந்தில் பயனம் செய்த பொழுது மழை பெய்தது. பேருந்தின் வெளியே மட்டுமின்றி உள்ளேயும் பெய்தது.அன்று ஆட்சியாளர்கள் மீது மட்டுமல்ல தேர்தல் நேரத்தில் மட்டும் வீரத்தை காட்டும் மக்கள் மீதும் கோபம் வந்தது.
ஊழலை கேள்வி கேட்காமல் ஒத்துக் கொள்ளும் சகிப்புதன்மை மீதும் கோபம் வந்தது.

இன்று பேருந்தின் ஓட்டை வழியாக விழுந்த அந்த பெண் மக்களின் சகிப்புதன்மையால் விழுந்தார்..ஊழல் லஞ்சம் நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது உண்மையில் நம்மை நாமே கேள்வி கேட்க வேண்டியுள்ளது.
திமுக அதிமுக என பழி போடாமல்  நாம் அனைவரும் இதற்கு காரணம் என்பதை உணர வேண்டும்.

திமுகவிற்கு அதிமுக மாற்று இல்லை. அதிமுகவிற்கு திமுக மாற்று இல்லை. உண்மையான மாற்றத்தை நாம் கொன்டு வராத வரை நிர்வாக சீர்கேடு தொடர்கதையே

No comments:

Post a Comment