Friday 9 October 2015

வல்லவன் விதி என்று மாறும்..?

மதமே அனைத்தையும் தீர்மானிக்கின்றது, பெண் கல்வி முதல் அனைவரின் உணவு பழக்கம் வரை என்று நாம் நினைத்தால் நாம் வடி கட்டிய முட்டாள்கள்.

ஒரு காலத்தில் பிராமனர்கள் மாட்டிறைச்சி உண்டா்கள் அதனால் அது சரி. பின் அவர்கள் அதை நிறுத்தியதால் இன்று அது தவறு.

ஆக  ஆதிக்க சாதியினர் செய்வது சரி. அவர்கள் செய்ய கூடாது என்று சொல்லி அதை மீறி செய்தோமானால் அது தவறு.

கடல் கடந்து போனால் பாவம். ஆனால் இன்று பெரும்பாலான பிராமனர்கள் அயல் நாடுகளில்.

கூத்து நாடகம் ஆகியவற்றில் நடிப்பவன் கீழ் சாதியாவான் என்று இந்து மதம் கூறுகிறது. ஆனால் இன்று திரை துறையில் பல பிராமனர்கள் உள்ளார்கள்.

வல்லவன் விதி என்று மாறும்..?

No comments:

Post a Comment