Saturday 9 May 2015

திரை உலகம் கதாநாயகர்களுக்கு மட்டும்தான் சொர்க்கம் தயாரிப்பாளர்களுக்கு அல்ல என்பதை ஆஸ்கர் ரவிச்சந்திரனின் சொத்துக்கள் முடக்கப்பட்டதிலிருந்து மீண்டும் நிருபனமானது.
படம் வெற்றி பெற்றால் அதற்கு உரிமை கொண்டாடும் நாயகர்கள் தோல்விக்கு அடுத்தவர்களை கை காட்டுவது வேடிக்கை.

பெரிய இயக்குனர்களாக சொல்லிக் கொள்பவர்கள் புதுமுகங்களை வைத்து படம் எடுப்பதில்லை.மாறாக பெரிய நாயகர்களை வைத்து பெரிய பொருட்செலவில் படம் எடுத்து தயாரிப்பாளர்களை திவாலாக்கிவிடுகிறார்கள்.
ஹாலிவுட்டுக்கு நிகராக எடுக்கிறேன் பேர்வழியில் அடுத்தவர் பணத்தில் படம் எடுப்பவர்கள் தங்கள் பணத்தை வைத்து ஏன் பிரம்மான்ட படத்தை எடுப்பதில்லை.

தயாரிப்பாளர்களின் அழிவு சினிமா துறையின் அழிவு என்பதை அனைவரும் உணர வேண்டும்.

No comments:

Post a Comment