Sunday 3 May 2015

இன்றைய கார்பரேட் உலகில் மே தினம் மிகவும் முக்கியத்துவும் பெறுகிறது.
.    உழைப்பை உறிஞ்சும் நிலை மன்னர் காலத்திலிருந்து இன்று வரை உழைப்பை சுரன்டிக் கொன்டுதான் உள்ளார்கள். மன்னருக்கு பணி செய்வதே குடிமக்களின் கடமை என்று இருந்த நிலை மாறி ஊதியத்திற்கேற்ற வேலை வேலைக்கேற்ற ஊதியம் என்ற நிலை வந்தது.ஆனாலும் பெரும் முதலாளிகளின் கரமே ஓங்கி இருந்தது
 8 மணி நேர உழைப்பு 8 மணி நேர ஓய்வு 8 மணி நேர களிப்பு என்பதற்காக பெரும் போராட்டத்திற்கு பிறகு பெரும் முதலாளிகளையும் பல அரசாங்கத்தையும் பனிய வைத்தது.
இன்று கார்பரேட்களின் கையிலிருக்கும் உலகம் இதைப் பற்றியெல்லாம் துளி கூட கவலைப்படுவதில்லை. 8 மணி நேரத்தையெல்லாம் தான்டி 12 மணி நேரம் 16 மணி நேரம் என்று நேரமெல்லாம் உழைத்துக் கொன்டு இருக்கின்றார்கள்.
அதிக பணம் என்ற ஒரே காரணத்தினால் அந்நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் அதிக நேரம் பணிபுரியும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.
இது போன்ற நேரத்தில் மே தினத்திற்கான முக்கியத்துவமும் உழைப்பாளர்களின் நலனும் முக்கியத்துவம் பெறுகிறது.உழைப்பாளர்களின் நலனை பின்னுக்கு தள்ளிவிட்டு 8 மணி வேலை நேரம் என்பதை துளியும் மதிக்காமல் உழைப்பு சுரன்டல் மட்டுமே முக்கியம் என்றும் லாபம் உலக பணகாரர்களில் இடம் என்பது மட்டுமே கொள்கை என்றால் நாளை உழைக்க ஒருவரும் இல்லாமல் போவார்கள்.

No comments:

Post a Comment